செய்திகள்

சென்னை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குளித்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பலி

Published On 2016-09-28 20:49 GMT   |   Update On 2016-09-28 20:49 GMT
சென்னை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குளித்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் லூட்டஸ் போலீஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சத்தியசீலன். இவர் கோடம்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இரண்டாவது மகன் நவீன்(வயது 15). புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நவீனும், அவரது நண்பர் சியாமும் சேர்ந்து பெரியமேட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ‘மைலேடீஸ்’ பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சென்றனர்.

நவீன் நீச்சல் தெரியும் என்று நீச்சல் குளம் பொறுப்பாளர் மரியதாஸிடம் பொய் சொல்லிவிட்டு ரூபாய் 15–க்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அவரது நண்பர் கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News