செய்திகள்

கிரானைட் முறைகேடு வழக்குகள் அடுத்த மாதம் ஒத்திவைப்பு

Published On 2016-08-04 09:13 GMT   |   Update On 2016-08-04 09:13 GMT
கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையை அடுத்தமாதத்துக்கு ஒத்திவைத்து மேலூர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருவாதவூர், மலம்பட்டி, கீழையூர், கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் பட்டா இடங்களில் அரசு அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாக பி.ஆர்.பி. உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மேலூர் கோர்ட்டில் 41 வழக்குகளை தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மேலூர் மாஜிஸ்திரேட் செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஷிலா ஆஜராகி வாதாடினார்.

விசாரணைக்கு பின் 41 வழக்குகளை அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Similar News