செய்திகள்
மில்கா சிங்குடன் நிர்மல் கவுர்

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்

Published On 2021-06-13 18:03 GMT   |   Update On 2021-06-13 18:03 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சண்டிகர்:

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் (85), கொரோனா தொற்றால் இன்று காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய மகளிர் வாலிபால் அணியின் முன்னாள் கேப்டனாக பதவி வகித்தவர் நிர்மல் கவுர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மல் கவுர் மறைவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News