செய்திகள்
போட்டியில் பாயிண்ட் எடுக்கும் ஆக்ரோஷத்தில் வீரர்கள்

புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ்

Published On 2019-07-27 02:03 GMT   |   Update On 2019-07-27 02:03 GMT
புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பாட்னா பைரட்ஸ் அணி 34-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஐதராபாத்:

புரோ கபடி லீக்கின் 7-வது போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில், ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில், 34-22 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத தெலுங்கு டைட்டன்ஸ் தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், உபி யோத்தா அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி 44-19 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி.யோத்தாவை எளிதில் தோற்கடித்தது.
Tags:    

Similar News