செய்திகள்
பார்சிலோனா செல்சி

நட்பு ரீதியிலான போட்டி: பார்சிலோனாவை 2-1 என வீழ்த்தியது செல்சி

Published On 2019-07-23 12:47 GMT   |   Update On 2019-07-23 12:47 GMT
ஜப்பானில் நடைபெற்ற ப்ரீ-சீசன் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் பார்சிலோனாவை 2-1 என வீழ்த்தியது செல்சி.
ஐரோப்பிய நாடுகளில் 2019-20-ம் ஆண்டுக்கான கிளப் கால்பந்து லீக் தொடர்கள் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு முன் நட்பு ரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா - இங்கிலாந்தின் முன்னணி கிளப்பான செல்சி அணிகள் மோதிய ஆட்டம் இன்று ஜப்பானில் நடைபெற்றது.

ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் செல்சி அணியின் டேமி ஆப்ரஹாம் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் செல்சி 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் நீண்டநேரம் கோல் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் செல்சி அணியின் ராஜ் பார்க்ளே ஒரு கோல் அடிக்க செல்சி 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை பார்சிலோனா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் (91-வது நிமிடம்) பார்சிலோனா அணியின் ராகிடிச் ஒரு கோல் அடித்தார்.

அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் செல்சி 2-1 என பார்சிலோனாவை வீழ்த்தியது.
Tags:    

Similar News