செய்திகள்

அம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்

Published On 2019-06-13 13:27 GMT   |   Update On 2019-06-13 13:27 GMT
இடது கை பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் துபாயில் இருக்கும்போதுதான், இந்திய அணியில் இணையுமாறு அழைப்பு வந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக தவான் விளையாடி வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும்போது தவானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தவானை உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து வெளியேற்றாமல் நிர்வாகம் வைத்துள்ளது. அதேவேளையில் மாற்று வீரரையும் அனுப்ப முடிவு செய்து. அதன்படி ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடன் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியது.



இறுதியில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். உடனே, தேர்வுக்குழு அவருக்கு போன் செய்து உடனடியாக இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லுமாறு தெரிவித்தது.



அப்போது ரிஷப் பந்த் துபாயில் தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக சென்றிருந்தார். விடுமுறைக்காக சென்றிருந்த நேரத்தில் ரிஷப் பந்துக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
Tags:    

Similar News