செய்திகள்

இந்திய ஆண்கள் வில்வித்தை அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Published On 2019-06-13 11:57 GMT   |   Update On 2019-06-13 11:57 GMT
இந்திய ஆண்கள் வில்வித்தை அணி ஜப்பானில் நடைபெற இருக்கும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி ரிகர்வ் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றது.

தருண்தீப் ராய், அட்டானு தாஸ், பிரவீண் ஜாதவ் கொண்ட அணி 5-3 என கனடாவை வீழ்த்தி தகுதி பெற்றது. அதேவேளையில் பெண்கள் அணி தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

2016 ஒலிம்பிக்கில் தாஸ் தனி நபர் பிரிவில் விளையாட தகுதி பெற்றார். ஆனால், காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News