செய்திகள்
தவான் காயம் எதிரொலி - ரிஷப் பந்த் இங்கிலாந்து செல்கிறார்
காயம் காரணமாக ஷிகர் தவான் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ள நிலையில் ரிஷப் பந்த் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர் ஷிகார் தவான் காயம் அடைந்தார். அவரது பெருவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 2 முதல் 3 வார காலம் விளையாட முடியாது.
ஆனாலும் தவானுக்கு பதிலாக மாற்றுவீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் அறிவிக்காமல் உள்ளது. தவான் இடத்தில் ரிஷப் பந்தை சேர்க்கவேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பீட்டர்சன் ஆகியோர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
அதேநேரத்தில் தவான் இடத்தில் அம்பதிராயுடுவை சேர்க்கலாம் என்று முன்னாள் தொடக்க வீரர் காம்பீர் யோசனை கூறி இருந்தார்.
தவானுக்கு பதிலாக மாற்று வீரரை கிரிக்கெட் வாரியம் அறிவிக்காவிட்டாலும், விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்தை தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ரிஷப் பந்த் உலககோப்பை போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறார். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நம்ப தகுந்த வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. அவர் இங்கிலாந்து சென்றாலும் நியூசிலாந்துக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் இடம் பெற மாட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக 16-ந்தேதி நடைபெறும் ஆட்டத்தில் அவர் அணியோடு இணைந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர் ஷிகார் தவான் காயம் அடைந்தார். அவரது பெருவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 2 முதல் 3 வார காலம் விளையாட முடியாது.
இந்தியா அடுத்து விளையாடும் 2 போட்டிகளில் தவான் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த அவர் காயம் அடைந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
ஆனாலும் தவானுக்கு பதிலாக மாற்றுவீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் அறிவிக்காமல் உள்ளது. தவான் இடத்தில் ரிஷப் பந்தை சேர்க்கவேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பீட்டர்சன் ஆகியோர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
அதேநேரத்தில் தவான் இடத்தில் அம்பதிராயுடுவை சேர்க்கலாம் என்று முன்னாள் தொடக்க வீரர் காம்பீர் யோசனை கூறி இருந்தார்.
தவானுக்கு பதிலாக மாற்று வீரரை கிரிக்கெட் வாரியம் அறிவிக்காவிட்டாலும், விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்தை தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ரிஷப் பந்த் உலககோப்பை போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறார். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நம்ப தகுந்த வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. அவர் இங்கிலாந்து சென்றாலும் நியூசிலாந்துக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் இடம் பெற மாட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக 16-ந்தேதி நடைபெறும் ஆட்டத்தில் அவர் அணியோடு இணைந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.