செய்திகள்

தோழியுடன் சென்ற மும்பை கிரிக்கெட் வீரர் படுகொலை

Published On 2019-06-07 10:27 GMT   |   Update On 2019-06-07 10:27 GMT
மும்பை புறநகர் பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஒருவர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை:

மும்பை புறநகர் பகுதியான பாந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் அம்பாதாஸ் பவார் (வயது 30). கிரிக்கெட் வீரரான இவர் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடிவந்தார். மேலும், இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியும் வழங்கி வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு ராகேஷ் தன் தோழியுடன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது சிலர் அவரை வழிமறித்து கூர்மையான ஆயுதங்களால் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராகேஷ், பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News