செய்திகள்

ஐபிஎல் - முதன் முறையாக 12 புள்ளியுடன் புளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த ஐதராபாத்

Published On 2019-05-06 05:33 GMT   |   Update On 2019-05-06 05:33 GMT
ஐபிஎல் போட்டியில் முதன் முறையாக 12 புள்ளியுடன் அடுத்த சுற்றுக்கு நுழைந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #SunRisersHyderabad #SRH #IPL2019
கடைசி லீக்கில் கொல்கத்தா அணி மும்பையிடம் உதை வாங்கியதால், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த சுற்று(பிளே-ஆப்) அதிர்ஷ்டம் கிட்டியது. லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன.

இருப்பினும் ரன்-ரேட்டில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி (ரன்ரேட் +0.577) 4-வது அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி அடுத்த சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

அது மட்டுமின்றி புள்ளி பட்டியலில் 4 முதல் 8-வது இடங்களை வகிக்கும் அணிகளுக்கு இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருப்பது இன்னொரு ஆச்சரியமாகும். #SunRisersHyderabad #SRH #IPL2019
Tags:    

Similar News