செய்திகள்

நியூசிலாந்து ஓபன் காலிறுதி: இந்திய வீரர் எச்எஸ் பிரனோய் போராடி தோல்வியடைந்தார்

Published On 2019-05-03 14:25 GMT   |   Update On 2019-05-03 14:25 GMT
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் எச்எஸ் பிரனோய் கடும் போராட்டத்திற்குப்பின் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். #NewzealandOpen
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் எச்எஸ் பிரனோய், ஜப்பானின் கான்ட்டா டிசுனேலயமா-வை எதிர்கொண்டார். உலகின் 11-வது தரவரிசை வீரரை எதிர்த்து தரநிலை பெறாத பிரனோய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் செட்டில் 17-13 என பிரனோய் முன்னிலையில் இருந்தார். அதன்பின் ஜப்பான் வீரர் ஐந்து புள்ளிகள் பெற்று 17-18 என நெருக்கடி கொடுத்தார். பின்னர் பிரனோய் தொடர்ச்சியாக மூன்று புள்ளிகள் பெற்று 21-17 என முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டின் தொடக்கத்தில் 4-0 என பிரனோய் முன்னிலையில் இருந்தார். அதன்பின் 11-5 என முன்னிலை கண்டார். பின்னர் தொடர்ந்து தவறுகள் செய்ய 11-14 என பின்தங்கினார். அதன்பின் ஜப்பான் வீரர் 21-15 என 2-வது செட்டை கைப்பற்றினார்.



வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டிலும் பிரனோய் அசந்துவிடவில்லை. சிறப்பாக விளையாடினால். இதனால் இருவரும் 14-14 என சமநிலையில் இருந்தனர். அதன்பின் ஜப்பான் வீரர் தொடர்ந்து 7 புள்ளிகள் பெற பிரனோய் 14-21 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் போராடிய பிரனோய், இறுதியில் தோல்வியையே சந்தித்தார்.
Tags:    

Similar News