செய்திகள்

இந்தியா உலகக்கோப்பைக்கான சிறந்த பேலன்ஸ் அணியாக திகழ்கிறது: ராகுல் டிராவிட்

Published On 2019-04-24 12:22 GMT   |   Update On 2019-04-24 12:22 GMT
உலகக்கோப்பைக்கான இந்திய அணி சிறந்த பேலன்ஸ்-ஐ கொண்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் ஜொலிக்கும் என ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #WorldCup2019
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த 15-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் ரிஷப் பந்த், அம்பதி ராயுடு ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனால் விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்தியா சிறந்த பேலன்ஸ் அணி, கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘கடந்த 30 மாதங்களாக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு நாம் சரியான காம்பினேசனை பெற்றுள்ளோம். இந்தியா உலகக்கோப்பையை வென்றால், நாம் 2-3 எனத் தோல்வியடைந்தது குறித்து கவலைப்பட மாட்டோம். இந்தியா உலகக்கோப்பையை வென்று நம்பர் 1 அணியாகும் என்பதை ஐசிசி தரவரிசை நிரூபிக்கும்.



உலகக்கோப்பைக்கான இந்திய அணி மிகவும் சிறந்ததாக உள்ளது. மேலும், பேலன்ஸ் அணியாகும். ஏராளமான காம்பினேசன் மற்றும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு அணியை தேர்வு செய்தபின்னர், அதன்பின் நாம் நிற்க வேண்டும். தற்போது தேர்வு செய்யப்பட்ட அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News