செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் 500-வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

Published On 2019-03-06 02:33 GMT   |   Update On 2019-03-06 02:33 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தனது 500-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. #500thODIwin #INDvAUS #India
நாக்பூர்:

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சா்ர்பில் கேப்டன் விராட் கோலி சதம் 116(120) ரன்களும், விஜய் சங்கர் 46(41) ரன்களும் எடுத்தனர்.

251 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி தனது 500-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 558 ஒரு நாள் போட்டி வெற்றிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இந்திய அணி இதுவரை 963 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 500 வெற்றியும், 414 தோல்வியும், 9 டையும் கண்டுள்ளது. 40 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. #500thODIwin #INDvAUS #India

Tags:    

Similar News