செய்திகள்

டோனி மந்தமான ஆட்டம் - ரசிகர்கள் ஆதங்கம்

Published On 2019-02-25 07:03 GMT   |   Update On 2019-02-25 07:03 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 37 பந்துகளை சந்தித்து 20 ரன்களே எடுத்த டோனியின் ஆட்டம் குறித்து சமூக வலை தளங்களில் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு விமர்சித்து உள்ளனர். #MSDhoni #INDvAUS

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் டோனி 37 பந்துகளை சந்தித்து 20 ரன்களே எடுத்தார். இதில் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடங்கும்.

அவரது இந்த மந்தமான ஆட்டத்தால் ரசிகர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

ராகுல், வீராட்கோலியின் சிறப்பான ஆட்டத்தை பார்க்கும் போது இந்திய அணி 160 முதல் 180 ரன்களை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் 46 ரன்களே மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவரில் 126 ரன்களே எடுக்க முடிந்தது.

டோனியின் ஆமை வேக ஆட்டத்தால் ரன்களை அதிக அளவு குவிக்க முடியவில்லை. விக்கெட்டுகள் சரிந்தாலும், ஆடுகளம் மோசமாக இருந்தாலும் அவர் பந்துகளை அடித்து ஆடாமல் விட்டது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

டோனியின் இந்த ஆட்டம் குறித்து சமூக வலை தளங்களில் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு விமர்சித்து உள்ளனர்.

டோனி கிட்டத்தட்ட பாதி பந்துகளில் (18) ஒரு ரன்கூட எடுக்காமல் ‘டாட்’ பந்துகளாக மாற்றினார். அதுவும் கடைசி ஓவரில் 4 டாட் பந்துகள் என்பது மிகவும் கொடுமையானது. டோனியின் மிகவும் மோசமான பேட்டிங் என்று அவரது ரசிகர்களே பலரும் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு ரசிகர் கூறும்போது, “டோனி ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த போட்டியால் பலரும் அவரது ஓய்வு குறித்து பேச வைத்துவிட்டதாக தெரிகிறது. குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியில் இருந்து அவர் நாகரீகமான முறையில் ஓய்வை அறிவித்துவிட வேண்டும்” என்றார்.

மற்றொரு ரசிகர் கூறும்போது, “அடுத்த போட்டியுடன் டோனி தனது ஓய்வு முடிவை அறிவித்துவிடுவார்” என்றார்.

கிரிக்கெட் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “டோனியின் ஆலோசனை வீரர்களுக்கு வேண்டு மானால் அவரை அணியில் ஆலோசகராக மட்டும் வைத்துக்கொள்ளலாம்” என்றார்.

சமூகவலை தளங்கள் முழுவதும் டோனியை வைத்து டிரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையில் ஒருசில ரசிகர்கள் மட்டும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். #MSDhoni #INDvAUS

Tags:    

Similar News