செய்திகள்

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கத்தார் அழைப்பு

Published On 2019-02-17 11:54 GMT   |   Update On 2019-02-17 11:54 GMT
2022-ல் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை காண வருமாறு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கத்தார் அழைப்பு விடுத்துள்ளது. #WorldCup
2022-ல் கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்துகிறது. இந்த உலகக்கோப்பைக்கான சிஇஓ-வாக நாஸர் காட்டர் உள்ளார். இவர் கிரிக்கெட்டில் 1983-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கால்பந்து தொடரை காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாஸர் காட்டர் கூறுகையில் ‘‘கத்தாரில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் நாம் அனைவரும் கொண்டாடதக்கதாக இருக்கும் என சொல்லலாம். உங்களை கத்தாரில் வரவேற்கும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் கிரிக்கெட் எவ்வளவு பெரிய விளையாட்டு என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, 1983-ம் ஆண்டு கோப்பையை வென்ற இந்திய அணியில் உள்ள வீரர்களும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் வென்ற அணியில் உள்ள வீரர்களும் உள்ளனர். கத்தார் வந்து உலகக்கோப்பை போட்டிகளை காண அவர்களுக்கு சிறப்பான அழைப்பு விடுக்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News