செய்திகள்

ரஞ்சி டிராபி: தமிழ்நாடு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இமாச்சல பிரதேசம்

Published On 2018-12-25 12:12 GMT   |   Update On 2018-12-25 12:12 GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இமாச்சல பிரதேசம் #RanjiTrophy
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த 22-ந்தேதி தொடங்கிய ஆட்டம் ஒன்றில் தமிழ் நாடு - இமாச்சல பிரதேச அணிகள் மோதின. தரம்சாலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இமாச்சல பிரதேச அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தமிழ்நாடு 227 ரன்களில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இமாச்சல பிரதேச அணி அங்கித் கல்சியின் (144) அபார சதத்தால் 463 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. 236 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு அபிநவ் முகுந்த் (128), பாபா இந்திரஜித் (106) ஆகியோரின் சதத்தால் 345 ரன்கள் சேர்த்தது.

இதனால் 110 ரன்கள் இமாச்சல பிரதேச அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது தமிழ்நாடு. இமாச்சல பிரதேசம் 1 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் தமிழ்நாடு 7 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வி, 4 டிரா மூலம் 12 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.
Tags:    

Similar News