செய்திகள்

இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் ஆர்வமுடன் விளையாட வேண்டும்: ராகுல் டிராவிட்

Published On 2018-12-23 09:20 GMT   |   Update On 2018-12-23 09:20 GMT
இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் ஆர்வமுடன் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். #RahulDravid
இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஜூனியர் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இளம் வீரர்களுக்கு நான் எப்போதும் சொல்வது என்னவென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் விளையாடும்போதுதான் சிறப்பான திருப்தியை பெற முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டுதான் கடினமான போட்டியாகும். அதில்தான் பல சவால்கள் உள்ளன.

5 நாள் போட்டியில் உங்களது உடல் தகுதி, மனஉறுதி, டெக்னிக்கல் ஆட்டம் ஆகியவற்றை பரிசோதித்து கொள்ளலாம். எனவேதான் அது சவாலானது. உங்களுக்கு சவால் வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு விராட் கோலி.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News