செய்திகள்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்- காலிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்

Published On 2018-11-02 09:06 GMT   |   Update On 2018-11-02 09:06 GMT
பிரான்ஸில் நடைபெற்று வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #RogerFederer
பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் 3-ம்நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் இத்தாலி வீரர் பெபினோ போக்னிஸியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர்- நிஷிகோரி (ஜப்பான்), ஜோகோவிச் (செர்பியா)- மரீன் சிலிச் (குரோஷியா), ஜாக் சாக் (அமெரிக்கா)- டொமினிக் தீயெம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வேரேவ் (ஜெர்மனி)- கரேன் காசநோவ் (ரஷியா) மோதுகிறார்கள்.
Tags:    

Similar News