செய்திகள்

உடற்தகுதி பெறவில்லை என ஷாகிப் அல் ஹசன் கூறியதால் கவலையில் வங்காள தேச அணி

Published On 2018-09-06 12:44 GMT   |   Update On 2018-09-06 12:44 GMT
ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு தான் 30 சதவிகிதம்தான் பிட் ஆக உள்ளேன் என்று ஷாகிப் அல் ஹசன் கூறியதால் வங்காள தேச அணி கவலையில் உள்ளது. #AsiaCup2018
ஆசிய கோப்பை 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றது. தகுதிச் சுற்று அடிப்படையில் ஹாங் காங் தகுதிப் பெற்றுள்ளது.

வங்காள தேச அணி துருப்புச் சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவருக்கு இலங்கை தொடரின்போது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை செய்யவில்லை.

சமீபத்தில் வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. அப்போது சுண்டு விரலில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.



வருகிற 15-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடருக்கு ஷாகிப் அல் ஹசன் போதுமான அளவு உடற்தகுதி பெற்று விடுவார் என்று கேப்டன் மோர்தசா மற்றும் அணி நிர்வாகம் எண்ணியது.

இந்நிலையில் தான் 20 முதல் 30 சதவிகிதம் மட்டுமே உடற்தகுதி பெற்றுள்ளேன் என்ற ஷாகிப் அல் ஹசனே கூறியுள்ளார். ஷாகிப் அல் ஹசனின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வங்காள தேச அணிக்கு கவலையை அளித்துள்ளது.
Tags:    

Similar News