செய்திகள்

டி20-யில் 18 பந்தில் அரைசதம் அடித்து இந்திய வீராங்கனை மந்தனா சாதனை

Published On 2018-07-29 14:49 GMT   |   Update On 2018-07-29 14:49 GMT
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சூப்பர் லீக் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 18 பந்தில் அரைசதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். #smritiMandhana
இங்கிலாந்தில் பெண்களுக்கான கிரிக்கெட் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் - லாபோரா லைட்னிங் அணிகள் மோதின. மழைக் காரணமாக 6 போட்டியாக குறைக்கப்பட்டது.

முதலில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணி பேட்டிங் செய்தது. இந்த அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம் பிடித்துள்ளார். இவர் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கினார்.

மந்தனா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 19 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 18 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டி20-யில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை சமன் செய்தார்.



முதலில் பேட்டிங் செய்த வெஸ்டர் ஸ்டோர்ம் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் குவித்தது. பின்னர் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லாபோரா லைட்னிங் அணி 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News