செய்திகள்

டிஎன்பிஎல் 2018- திண்டுக்கல்லுக்கு 186 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்

Published On 2018-07-18 15:51 GMT   |   Update On 2018-07-18 15:51 GMT
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 186 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ். #KKvDD #TNPL2018
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி லைகா கோவை கிங்ஸ் அணியின் ஷாருக் கான் அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 4 ரன்னிலும், ரஞ்சன் பால் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ரவி குமார் ரோஹித் 26 ரன்கள் அடித்தார். தொடக்க வீரரான ஷாருக் கான் 54 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 86 ரன்கள் குவித்தார். அக்கி ஸ்ரீநாத் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News