செய்திகள்

மங்கோலியா குத்துச்சண்டை - மந்தீப், சோனியா லாதர், லொவோலினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2018-06-23 11:52 GMT   |   Update On 2018-06-23 11:52 GMT
மங்கோலியாவில் நடைபெற்றுவரும் உலான்பாதர் கோப்பை குத்துச்சண்டை தொடரின் இறுதிப்போட்டிக்கு மந்தீப் ஜாங்ரா, சோனியா லாதர், லொவோலினா போர்கோஹைன் ஆகியோர் முன்னேறியுள்ளனர். #MandeepJangra #SoniaLather #LovolinaBorgohain #UlaanbaatarCup

உலான்பாதர்:

மங்கோலியா தலைநகர் உலான்பாதரில் குத்துச்சண்டை கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான பிரிவின் 69 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் மந்தீப் ஜாங்ரா, மங்கோலியா வீரர் டிசெண்ட்-ஆயுஷை எதிர்கொண்டார். இப்போட்டியில் மந்தீப் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான பிரிவின் 57 கிலோ எடைப்பிரிவில் சோனியா லாதரும், 69 கிலோ எடைப்பிரிவில் லொவோலினா போர்கோஹைனும் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி போட்டியில் முன்னாள் உலக மற்றும் ஆசிய சாம்பியனான சரிதா தேவி, சீன தைபே வீராங்கனையான ஷீ யூ வூ விடம் தோல்வியடைந்தார். #MandeepJangra #SoniaLather #LovolinaBorgohain #UlaanbaatarCup
Tags:    

Similar News