செய்திகள்

இரண்டு பேருடன் ஒரே நேரத்தில் திருமணம்- ரொனால்டினோ என்ன சொல்கிறார்

Published On 2018-05-25 16:34 GMT   |   Update On 2018-05-25 16:34 GMT
ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளை நான் திருமணம் செய்வதாக வரும் செய்தி மிகப்பெரிய பொய் என ரொனால்டினோ விளக்கம் அளித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரராக திகழ்ந்த ரொனால்டினோ பிரிசிலா, பெட்ரிஸ் சவுசா ஆகிய இரண்டு பெண்களை காதலித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த 2 பெண்களும் ரொனால்டினோவுடன் ஒன்றாக வசித்து வந்ததாகவும், தற்போது அவர்களை அவர் திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளதாகவும் செய்தி வெளியானது.

உச்சக்கட்டமாக ரொனால்டினா இந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் மணக்கிறார். ஆகஸ்ட் மாதம் ரியோவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது. ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்வதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய இருப்பதாக வந்த செய்து மிகப்பெரிய பொய் என்று ரொனால்டினோ விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விளையாட்டு டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘‘ஒட்டு மொத்த உலகமே எனக்கு போன் செய்து கொண்டிருக்கிறது. நான் திருமணம் செய்யவில்லை. இது ஒரு மிகப்பெரிய பொய்’’ என்று கூறியுள்ளார்.



38 வயதாகும் இவர் 2013-ம் ஆண்டிற்குப் பிறகு தேசிய அணியில் விளையாடியது கிடையாது. 1999 முதல் 2013 வரை பிரேசில் அணிக்காக 97 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் அடித்துள்ளார். அட்டக்கிங் மிட்பில்டராகவும், முன்கள வீரராகவும், விங்கராகவும் விளையாடியுள்ளார். இதில் அட்டக்கிங் மிட்பீல்டராகத்தான் பெரும்பாலும் விளையாடியுள்ளார். 2002-ம் ஆண்டு பிரேசில் அணி உலககோப்பையை வெல்ல இவரது ஆட்டம் முக்கியமாக இருந்தது. ரொனால்டோ, ரிவால்டோவுடன் இணைந்து அசத்தினார்.

2001 முதல் 2003 வரை பிரான்சின் பிஎஸ்ஜி அணிக்காக 55 போட்டிகளில் விளையாடி 17 கோல்கள் அடித்தார். அதன்பின் 2003-ல் பார்சிலோனா அணிக்கு மாறினார். அந்த அணிக்காக 2008 வரை விளையாடி 145 போட்டியில் 70 கோல் அடித்துள்ளார். 2003-ம் ஆண்டு பார்சிலோனாவிற்கு வந்த ஆண்டிலேயே பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றார். அந்த வருடம் பார்சிலோனா லா லிகா டைட்டிலை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. #ronaldhino
Tags:    

Similar News