செய்திகள்

ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் மெக்சிகோ மிட்பீல்டர்

Published On 2018-05-15 15:36 GMT   |   Update On 2018-05-15 15:36 GMT
உலகக் கோப்பைக்கான 28 பேர் கொண்ட மெக்சிகோ அணியில் இடம்பிடித்துள்ள மிட்பீல்டர் ரபெல் மார்குயஸ் சாதனைப் படைக்க உள்ளார். #Worldcup2018
ரஷியாவில் ஜூன் மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான ஒவ்வொரு அணியும் தயாராகி வருகின்றன. மெக்சிகோ அணி 28 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்துள்ளது. இதில் மிட்பீல்டரான ரபெல் மார்குயஸ் இடம்பிடித்துள்ளார்.

அவர் ஆடும் லெவனில் இடம்பிடித்தால், ஐந்து முறை உலகக்கோப்பையில் விளையாடிய 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.  இதற்கு முன் ஜெர்மனி மிட்பீல்டர் லோதர் மத்தேயுஸ், மெக்சிகோ கோல்கீப்பர் அன்டோனியோ கார்பஜால் ஐந்து உலகக்கோப்பையில் விளையாடியுள்ளனர்.



உலகக்கோப்பையில் குரூப் எஃப் பிரிவில் இடம்பிடித்துள்ள மெக்சிகோ, ஜூன் 17-ந்தேதி ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் தென்கொரியா, ஸ்வீடன் அணிகள் இடம்பிடித்துள்ளன.

Tags:    

Similar News