செய்திகள்

காமன்வெல்த் - இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளி பதக்கம் வென்றார்

Published On 2018-04-12 05:17 GMT   |   Update On 2018-04-12 05:17 GMT
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வின் வெள்ளி பதக்கம் வென்றார். #CWG2018 #GC2018
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் கேம்ஸ் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதல் நடைபெற்றது. இந்தியா சார்பில் தேஜாஸ்வனி சவந்த், அன்சும் மவுட்கில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தேஜாஸ்வினி சவந்த் 6 சுற்றுகள் முடிவில் 618.9 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். சிங்கப்பூர் வீராங்கனை மார்டினா லின்ட்செ வெலோசோ 621 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஸ்காட்லாந்து வீராங்கனை 618.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தார். 
Tags:    

Similar News