செய்திகள்

ஷமி விரைவில் நலம்பெற வேண்டும் - ஷமி மனைவி ஹசின் ஜஹான்

Published On 2018-03-26 21:52 GMT   |   Update On 2018-03-26 21:52 GMT
விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ஷமி விரைவில் குணமடைய வேண்டும் என அவரது மனைவி ஹசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமிக்கும் அவரது மனைவி ஹசின் ஜஹானுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வருகிறது. ஹசின் ஜஹான் ஷமி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்து வருகிறது.

மனைவியுடனான பிரச்சினையில் இருந்து முழுமையான மீளாத முகமது ஷமி பயிற்சிக்காக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து டெல்லி திரும்பும்போது முகமது ஷமி ஓட்டிச் சென்ற கார் வேனுடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஷமியின் தலையில் காயம் ஏற்பட்டது. காயத்திற்காக நான்கு தையல் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ஷமி விரைவில் குணமடைய வேண்டும் என அவரது மனைவி ஹசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஷமி ஒன்றும் எனக்கு விரோதி அல்ல. அவர் எனது கணவர். அவருக்கு ஒன்று என்றால் நான் துடித்து விடுவேன். அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த நிலையில் நான் அவரை பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவரது குடும்பத்தினர் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News