செய்திகள்

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்

Published On 2018-03-24 08:29 GMT   |   Update On 2018-03-24 08:29 GMT
காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது இந்தியா சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். #CWG #PVSindhu
புதுடெல்லி:

21-வது காமன்வெல்த் போட்டி வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடக்கிறது.

இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது ஒவ்வொரு நாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணி வகுப்பு நடக்கும். இதில் இந்தியா சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவர் பின்னால் இந்திய வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து செல்கிறார்கள்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து பல சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது.

2006-ம் ஆண்டு மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், 2010-ம் ஆண்டு போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
Tags:    

Similar News