செய்திகள்

டையில் முடிந்த கர்நாடகா - பஞ்சாப் டி20 ஆட்டம்: சூப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது

Published On 2018-01-21 10:17 GMT   |   Update On 2018-01-21 10:17 GMT
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 லீக் ஆட்டத்தில் கர்நாடகா - பஞ்சாப் இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது. சூப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. #SyedMushtaqAli
ரஞ்சி டிராபியில் விளையாடும் மாநில அணிகளுக்கு இடையில் சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மண்டலம் வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கர்நாடகா - பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கவுதம் 36 ரன்னும், ஜோஷி அவுட்டாகாமல் 40 ரன்னும் அடித்தனர். பஞ்சாப் அணியின் பால்தேஜ் சிங் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. தொடக்க வீரர் மந்தீப் சிங் 45 ரன்னும், ஹர்பஜன் சிங் 33 ரன்னும் எடுத்தனர்.

ஆட்டம் டையில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
Tags:    

Similar News