செய்திகள்

ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பயேஸ் ஜோடி தோல்வி

Published On 2018-01-21 08:46 GMT   |   Update On 2018-01-21 08:46 GMT
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி தோல்வியடைந்தது. #AUSOPEN
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பயஸ், பூரவ் ராஜா உடன் இணைந்து விளையாடினார். மூன்று சுற்றில் வெற்றி பெற்ற இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.



இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பயஸ் ஜோடி கொலம்பியாவைச் சேர்ந்த ஜூயன் செபஸ்டியான் கேபல் - ராபர்ட் பரா ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி தொடக்கம் முதலே தடுமாற ஆரம்பித்தியது. இதனால் 1-6, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இதற்கு முந்தைய சுற்றில் 5-ம் நிலை ஜோடியை வீழ்த்தி பயஸ் ஜோடி இந்த சுற்றில் 11-ம் நிலை ஜோடியிடம் பரிதாபமாக வீழ்ந்தது. #AUSOPEN #AustralianOpen

Tags:    

Similar News