செய்திகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக பிராட் ஹாட்ஜ் நியமனம்

Published On 2017-12-14 06:08 GMT   |   Update On 2017-12-14 06:08 GMT
ஐ.பி.எல். தொடரில் விளையாடும் அணிகள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக பிராட் ஹாட்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐ.பி.எல். எனப்படும் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது, 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், 11-வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெற இருக்கிறது.

11-வது வருடத்திற்கான லீக் தொடருக்கான பிசிசிஐ பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக வீரர்களின் ஏலங்களுக்கான மொத்த தொகை 60 கோடி ரூபாயில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது.



இதற்கிடையில் ஒவ்வொரு அணியும் தங்களை கட்டமைப்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ்-ஐ தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்து இரண்டு சீசனில் குஜராத் லயன் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை மூன்று வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
Tags:    

Similar News