செய்திகள்
5 அல்லது 6 ஓவர்கள் வீசியிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்: லோகேஷ் ராகுல்
இன்னும் ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் வீசியிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம் என இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின்போது விராட் கோலி சதத்தால், இலங்கை அணிக்கு இந்தியா 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்தியாவின் அபார பந்து வீச்சால் இலங்கை அணி விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தது. 26.3 ஓவரில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அப்போது வெளிச்சமின்மை காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் 5 முதல் 6 ஓவர்கள் வீச வாய்ப்பு இருந்திருந்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என இந்திய தொடக்க பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.
இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘நாங்கள் இன்னும் ஐந்து அல்லது 6 ஓவர்கள் வீசியிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். எங்களுக்கு இது ஒரு நல்ல அனுபவம். இதேபோன்று ஆடுகளத்தில் ஐந்து நாட்கள் ஆட்டம் நடைபெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்’’ என்றார்.
இந்தியாவின் அபார பந்து வீச்சால் இலங்கை அணி விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தது. 26.3 ஓவரில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அப்போது வெளிச்சமின்மை காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் 5 முதல் 6 ஓவர்கள் வீச வாய்ப்பு இருந்திருந்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என இந்திய தொடக்க பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.
இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘நாங்கள் இன்னும் ஐந்து அல்லது 6 ஓவர்கள் வீசியிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். எங்களுக்கு இது ஒரு நல்ல அனுபவம். இதேபோன்று ஆடுகளத்தில் ஐந்து நாட்கள் ஆட்டம் நடைபெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்’’ என்றார்.