செய்திகள்

மீண்டும் டாப்-10 பட்டியலில் இடம்பிடிப்பேன்: சாய்னா நேவால்

Published On 2017-10-19 08:53 GMT   |   Update On 2017-10-19 08:53 GMT
பேட்மிண்டன் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம் பெறும் நோக்கத்தில் டென்மார்க் ஓபன் தொடரில் விளையாடி வருவதாக சாய்னா நேவால் தெரிவித்தார்.
ஓடென்ஸ்:

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் ஓபன் தொடரின் முதல் சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரினை வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார். தனது வெற்றி குறித்து அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

நான் இதற்கு முன் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தேன். தற்போது உலக தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளேன். என்னை விட பின் தங்கி இருந்த வீராங்கனைகள் அனைவரும் முன்னேறி சென்றுவிட்டனர். அதிலிருந்து முன்னேறுவதற்கு நான் கடினமாக உழைக்க வேண்டும். முதல் 10 இடங்களில் வருவதற்கு முயன்று வருகிறேன்.

இதற்கு முன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி எனக்கு பெரிய பாடத்தை புகட்டியுள்ளது. அப்போட்டியில் நான் அரையிறுதிச்சுற்றில் தோல்வியடைந்தேன். அதனால் நான் கடின பயிற்சி மேற்கொண்டேன்.

எனது பயிற்சியாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் எனக்கு கடின பயிற்சி அளித்தனர். அதனால் தான் இந்த போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றேன். இந்த தொடரில் பட்டத்தை வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் விளையாட உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News