செய்திகள்
மகன், மகள் பெயரில் போலி கணக்கு: நீக்கச்சொல்லி டுவிட்டர் நிறுவனத்திற்கு சச்சின் வேண்டுகோள்
டுவிட்டர் பக்கத்தில் உள்ள போலியான தனது மகள் மற்றும் மகனின் பெயரில் உள்ள போலி அக்கவுண்டை நீக்கும்படி சச்சின் தெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கடவுள் என்று போற்றப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவருக்கு அர்ஜூன் என்ற மகனும், சாரா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரிலும் டுவிட்டர் அக்கவுண்ட் உள்ளது. இதில் இருந்து சச்சின் தெண்டுல்கரின் மகன் மற்றும் மகள் டுவிட் செய்வதுபோல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனால் சச்சின் தெண்டுல்கர் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். எனது மகன் மற்றும் மகள் டுவிட்டர் பக்கத்தில் இல்லை. அவர்களுக்கு அக்கவுண்ட் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த போலி கணக்குகளை உடனடியான நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவருக்கு அர்ஜூன் என்ற மகனும், சாரா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரிலும் டுவிட்டர் அக்கவுண்ட் உள்ளது. இதில் இருந்து சச்சின் தெண்டுல்கரின் மகன் மற்றும் மகள் டுவிட் செய்வதுபோல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனால் சச்சின் தெண்டுல்கர் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். எனது மகன் மற்றும் மகள் டுவிட்டர் பக்கத்தில் இல்லை. அவர்களுக்கு அக்கவுண்ட் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த போலி கணக்குகளை உடனடியான நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.