செய்திகள்
காயத்தில் இருந்து மீண்டு வந்த ஆரோன் பிஞ்ச் சதம் அடித்து அசத்தல்
இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் களம் இறங்காத ஆரோன் பிஞ்ச், இன்றைய போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத ஆரோன் பிஞ்ச் இன்றைய போட்டியில் இடம்பிடித்தார். தொடக்க வீரர் கார்ட்ரைட் நீக்கப்பட்டு இவர் சேர்க்கப்பட்டார்.
வார்னர் உடன் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் பிஞ்ச் முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் செல்ல செல்ல அபாரமாக விளையாடினார்.
61 பந்தில் அரைசதம் அடித்த ஆரோன் பிஞ்ச், 34-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விளாசி சதம் அடித்தார். 110 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்ருடன் சதத்தை கடந்தார்.
இவரது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
வார்னர் உடன் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் பிஞ்ச் முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் செல்ல செல்ல அபாரமாக விளையாடினார்.
61 பந்தில் அரைசதம் அடித்த ஆரோன் பிஞ்ச், 34-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விளாசி சதம் அடித்தார். 110 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்ருடன் சதத்தை கடந்தார்.
இவரது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.