செய்திகள்

ஓய்வு கொண்டாட்டத்திற்காக பாரில் 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவழித்த உசைன் போல்ட்

Published On 2017-08-21 14:17 GMT   |   Update On 2017-08-21 14:17 GMT
லண்டனில் ஓய்வு பெற்றதை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பாருக்குச் சென்ற உசைன் போல்ட், 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார்.
உலகின் அதிகவேக ஓட்டப் பந்தய வீரர் என்று அழைக்கப்படுபவர் உசைன் போல்ட். 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கினார்.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்தான் தன்னுடைய கடைசி ஓட்டம் என்று அறிவித்திருந்தார். இந்த ஓட்டத்தில் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடமே பிடித்தார். 200 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்வில்லை. 4X100 மீட்டர் ஓட்டத்தில் காயம் காரணமாக டிரக்கிலேயே விழுந்தார்.



மிகப்பெரிய சாதனைகளோடு விடைபெற நினைத்த அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. என்றாலும் தனது ஓய்வை நண்பர்களுடன் பாருக்கு சென்று ஜாலியாக கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்திற்காக அவர் 7030.23 பவுண்டு (சுமார் 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்) பில் கட்டியுள்ளார். ஏற்கனவே, தனது காதில் சாம்பைன்-ஐ ஊற்றியபடி ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘‘நான் இப்படித்தான் செய்வேன். என்னை யாரும் தவறாக நினைக்காதீர்கள்’’ என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News