செய்திகள்
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: காயத்தால் மரியா ஷரபோவா விலகல்
கனடாவில் உள்ள டொராண்டோவில் நடைபெற இருக்கும் ரோஜர்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார்.
ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இவர், ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 15 மாதம் தடைபெற்றார். அதன்பின் தற்போது டென்னிஸ் அரங்கில் களமிறங்கி விளையாடி வருகிறார்.
ஆகஸ்ட் 28-ந்தேதி அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டாக ரோஜர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரை கருதப்படுகிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்காக மரியா ஷரபோவாவிற்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டு, அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடரில் சிறப்பாக விளையாட முடிவு செய்திருந்தார்.
ஆனால், மரியா ஷரபோவாவின் இடது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ரோஜர்ஸ் ஓபனில் இருந்து விலகியுள்ளார். ஆகவே, அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஷரபோவா பங்கேற்பது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 28-ந்தேதி அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டாக ரோஜர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரை கருதப்படுகிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்காக மரியா ஷரபோவாவிற்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டு, அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடரில் சிறப்பாக விளையாட முடிவு செய்திருந்தார்.
ஆனால், மரியா ஷரபோவாவின் இடது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ரோஜர்ஸ் ஓபனில் இருந்து விலகியுள்ளார். ஆகவே, அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஷரபோவா பங்கேற்பது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.