செய்திகள்

5-வது புரோ கபடி லீக் போட்டியின் பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அதிகரிப்பு

Published On 2017-07-17 03:44 GMT   |   Update On 2017-07-17 03:44 GMT
28-ந்தேதி தொடங்க உள்ள 12 அணிகள் பங்கேற்கும் 5-வது புரோ கபடி லீக் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 அணிகள் பங்கேற்கும் 5-வது புரோ கபடி லீக் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய சீசனை விட 4 மடங்கு அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1.2 கோடியும் வழங்கப்படும்.

இதற்கிடையே பெங்களூரு புல்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் குமாரும், துணை கேப்டனாக ரவிந்தர் பஹாலும் செயல்படுவார்கள் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News