செய்திகள்

நெதர்லாந்தில் பிரதமர் மோடியை சந்தித்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

Published On 2017-06-28 14:18 GMT   |   Update On 2017-06-28 14:18 GMT
நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடியை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது மனைவியுடன் சேர்ந்து சந்தித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்குச் சென்றார். முதலில் போர்ச்சுக்கல் சென்ற அவர் பின்னர், அமெரிக்கா சென்றார். நேற்று கடைசியாக நெதர்லாந்து சென்றிருந்தார்.

நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் சென்றடையும்போது, இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா தனது மனைவியுடன் சென்று மோடியை சந்தித்தார். மோடியுடன் சந்தித்த போட்டோவை தனது சமூக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவிற்கு சமீப காலமாக இந்திய தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற பின் அவர் ஓய்வில்தான் இருக்கிறார். தற்போது அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார்.
Tags:    

Similar News