செய்திகள்

‘பி’ டிவிசன் லீக் பெண்கள் கைப்பந்து: தமிழக போலீஸ் அணி வெற்றி

Published On 2017-06-27 06:41 GMT   |   Update On 2017-06-27 06:41 GMT
சென்னை மாவட்ட ‘பி’ டிவிசன் லீக் பெண்கள் கைப்பந்து போட்டியில் தமிழக போலீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை:

சென்னை மாவட்ட ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் பிரிவு லீக் போட்டி நேற்று மாலை தொடங்கியது.

போட்டியின் தொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை தலைமை தாங்கினார். டாக்டர் வி.ஹிமா பிந்து, எஸ்.டி.ஏ.டி. மானேஜர் ஜெ.மெர்சி ரெஜினா ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

சென்னை மாவட்ட கைப்பந்து சங்க நிர்வாகிகள் ஏ.கே.சித்திரைபாண்டியன், பழனியப்பன், ஜெகதீசன், கேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

பெண்கள் பிரிவில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழக போலீஸ் அணி 25-15, 25-21 என்ற நேர்செட்டில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 21-25, 25-21, 25-23 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. விடுதி அணியை வென்றது.

ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த சூப்பர் லீக் முதல் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 25-14, 25-17 என்ற நேர்செட்டில் அக்னி பிரண்ட்ஸ் அணியை சாய்த்தது.
Tags:    

Similar News