செய்திகள்

பாகிஸ்தான் சிறப்பான ஆட்டம்: தொடக்க வீரர்கள் அரைசதம்; 128/1 (23 ஓவர்)

Published On 2017-06-18 11:13 GMT   |   Update On 2017-06-18 11:13 GMT
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வீரர்கள் அரைசதம் அடித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றுவதற்கான இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ப்ரா பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால், க்ரீஸிற்கு வெளியில் கால்வைத்து பந்து வீசியதால் நோ-பால் ஆனது. இதனால் பகர் சமான் 3 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

இருவரும் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவின் பந்து வீச்சு எந்த வகையிலும் அச்சுறுத்தும் வகையில் இல்லை. இதனால் இருவரும் அரைசதம் நோக்கி முன்னேறினார்கள். 20-வது ஓவரில் இருவரும் அரைசதம் அடித்தனர். அசார் அலி 61 பந்தில் அரைசதமும், பகர் சமான் 60 பந்தில் அரைசதமும் அடித்தனர்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 23 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.

அசார் அலி 59 ரன்னில் ரன்அவுட் ஆனார். பகர் சமான் 56 ரன்னுடன் விளையாடி வருகிறார்.
Tags:    

Similar News