செய்திகள்
டேவிஸ் கோப்பை: பிளேஆஃப் சுற்றில் கனடாவை எதிர்கொள்கிறது இந்தியா
டேவிஸ் கோப்பை உலக குரூப் பிளேஆஃப் சுற்றில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது. இந்த தொடர் செப்டம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை நடக்கிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய- ஓசியானியா குரூப்-1 இரண்டாவது சுற்றில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் அணிகள் பெங்களூரில் விளையாடின. இதில் 4-1 என இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக குரூப் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த பிளே ஆஃப் சுற்று செப்டம்பர் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கனடாவை இந்தியா எதிர்கொள்கிறது. டேவிஸ்கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன. டேவிஸ் கோப்பை உலக குரூப்பிற்கான தகுதிச் சுற்று இதுவாகும். கனடாவை வீழ்த்தினால் முக்கிய அணிகள் மோதும் 16 உலக நாடுகள் பங்கேற்கும் சுற்றுக்கு முன்னேறும். இது நாக்அவுட் சுற்றாகும்.
இந்த பிளே ஆஃப் சுற்று செப்டம்பர் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கனடாவை இந்தியா எதிர்கொள்கிறது. டேவிஸ்கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன. டேவிஸ் கோப்பை உலக குரூப்பிற்கான தகுதிச் சுற்று இதுவாகும். கனடாவை வீழ்த்தினால் முக்கிய அணிகள் மோதும் 16 உலக நாடுகள் பங்கேற்கும் சுற்றுக்கு முன்னேறும். இது நாக்அவுட் சுற்றாகும்.