செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தலால் ஐ.பி.எல். தொடர் அட்டவணையில் சிறு மாற்றம்

Published On 2017-03-20 13:09 GMT   |   Update On 2017-03-20 13:09 GMT
டெல்லியில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். தொடருக்கான அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். சீசன்-10 டி20 கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி, மே மாதம் 21-ந்தேதி வரை நடக்கிறது. ஐ.பி.எல். தொடர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நேரத்தில் ஏப்ரல் 22-ந்தேதி டெல்லியில் மாநகராட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நடக்கும் 22-ந்தேதி டெல்லியில் டெல்லி - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி நடப்பதாக இருந்தது. அதே நாளில் புனேவில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 22-ந்தேதி டெல்லி - மும்பை இடையிலான போட்டி மும்பையில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. அதே தேதியில் புனே- ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி 8 மணிக்குப் பதிலாக மாலை 4 மணிக்கு நடக்கிறது. 22-ந்தேதி டெல்லியில் நடைபெற இருந்த போட்டி மே 6-ந்தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Similar News