செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டி: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது

Published On 2017-02-27 09:03 GMT   |   Update On 2017-02-27 09:03 GMT
டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
புதுடெல்லி:

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஏற்கனவே வெண்கலப்பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.



இந்நிலையில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜப்பானை வீழ்த்தி இந்தியாவின் ஹீனா சித்து, ஜித்து ராய் அணி இந்திய அணிக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.

பதக்கப்பட்டியலில் சீனா (5 தங்கம், 4 வெள்ளி) தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

Similar News