செய்திகள்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு சாய்னா முன்னேற்றம்

Published On 2017-01-21 14:44 GMT   |   Update On 2017-01-21 14:44 GMT
மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உலக பேட்மிண்டன் தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால் மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் ஹாங்காங்கின் யிப் புய் யின்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-13, 21-10 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முன்னதாக, காலிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் பிட்ரியனியை எதிர்கொண்டார். சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த போட்டியில் சாய்னா 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Similar News