செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: சானியா உள்ளே, போபண்ணா வெளியே

Published On 2017-01-20 11:12 GMT   |   Update On 2017-01-20 11:13 GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். போபண்ணா 2ம் சுற்றில் தோல்வியடைந்தார்.
மெல்போர்ன்:

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவுக்கு இன்று வெற்றியும் தோல்வியும் கலந்த நாளாக அமைந்துள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)- ஸ்டிரைகோவா (செக் குடியரசு) ஜோடி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சமந்தா (ஆஸ்திரேலியா)- ஷூய் ஜாங் (சீனா) ஜோடியை 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் சானியா ஜோடி வீழ்த்தியது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் போபண்ணா (இந்தியா)- பப்லோ சுவாஸ் (உருகுவே) ஜோடி தோற்று வெளியேறியது. 15-ம் தரநிலையில் உள்ள போபண்ணா ஜோடி, தரநிலையில் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட்-பிராட்லி மவுஸ்லி ஜோடியிடம் 6-2, 6-7(2), 4-6 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தது.

ஏற்கனவே முன்னணி வீரரான லியாண்டர் பயஸ், அவரது பார்ட்னர் ஆண்ட்ரே சா மற்றும் புரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Similar News