செய்திகள்

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: வத்தலக்குண்டு பள்ளி மாணவன் சாதனை

Published On 2016-12-20 04:33 GMT   |   Update On 2016-12-20 04:33 GMT
சத்தீஸ்கரில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சுதஹனுமன் சாதனை படைத்துள்ளான்.
வத்தலக்குண்டு :

சத்தீஸ்கரில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தமிழக கூடைப்பந்தாட்ட அணி சார்பில் வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சுதஹனுமன் பங்கேற்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான்.

சாதனை படைத்த மாணவனை பள்ளி முதல்வர் ரெக்ஸ்பீட்டர், தாளாளர் சேவியர், உடற்கல்வி ஆசிரியர் வெண்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

Similar News