செய்திகள்
மோடியுடன் இசாந்த் சர்மா சந்திப்பு: திருமண அழைப்பிதழ் கொடுத்தார்
பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா. இவர் தற்போது இங்கிலாந்து தொடரில் இடம்பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் நியூசிலாந்து தொடருக்கு தயாரானபோது வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் அதன்பின் ஆடும் லெவனில் இடம்பிடிக்காமல் உள்ளார்.
இவருக்கும் இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியில் இடம்பிடித்திருந்த பிரதிமா சிங்கிற்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வரும் 9-ந்தேதி வெள்ளிக்கிழமை டெல்லியில் நடக்கிறது.
இவர்கள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இருவரும் மோடியை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தனர். அத்துடன் அவரிடம் ஆசியும் பெற்றனர்.
கடந்த 30-ந்தேதி யுவராஜ் சிங் திருமணம் முடிந்தது. இவரும் திருமணத்திற்கு மோடியை அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் பிரதிமா சிங்.
இவருக்கும் இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியில் இடம்பிடித்திருந்த பிரதிமா சிங்கிற்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வரும் 9-ந்தேதி வெள்ளிக்கிழமை டெல்லியில் நடக்கிறது.
இவர்கள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இருவரும் மோடியை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தனர். அத்துடன் அவரிடம் ஆசியும் பெற்றனர்.
கடந்த 30-ந்தேதி யுவராஜ் சிங் திருமணம் முடிந்தது. இவரும் திருமணத்திற்கு மோடியை அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் பிரதிமா சிங்.