செய்திகள்
ஆசிய டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி
ஆசிய டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய பெண்கள் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.
ஆசிய டி20 கிரிக்கெட் தொடர் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் மிதலி ராஜ் 62 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது.
பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. இந்திய வீராங்கனை ப்ரீத்தி போஸ், ஏக்னா பிஸ்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்த இலங்கை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய பெண்கள் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இந்தியா பெறும் 3-வது வெற்றி இதுவாகும். இந்திய அணி நாளை நேபாளம் அணியுடன் மோதுகிறது.
பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. இந்திய வீராங்கனை ப்ரீத்தி போஸ், ஏக்னா பிஸ்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்த இலங்கை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய பெண்கள் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இந்தியா பெறும் 3-வது வெற்றி இதுவாகும். இந்திய அணி நாளை நேபாளம் அணியுடன் மோதுகிறது.