செய்திகள்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2016-11-25 10:22 GMT   |   Update On 2016-11-25 10:22 GMT
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஹாங்காங்கில் உள்ள கவ்லூனில் ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சிங்கப்பூரின் சியாவோயு லியாங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 21-17 என பி.வி. சிந்து கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கடுமையாகப் போராடி 21-23 என இழந்தார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது சுற்றில் சாய்னா முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடினார். இதன் காரணமாக அந்த செட்டை 21-18 எனக் கைப்பற்றினார். இறுதியில் 2-1 என சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியில் ஹாங்காங் வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார். ஆண்களுக்கான காலிறுதியில் அஜய் ஜெயராம் மற்றும் சமீர் வர்மா ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

Similar News