செய்திகள்
யோகேஷ்வர் தத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடையாது
யோகேஷ்வர் தத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதற்கு என்ன காரணம் என்பதை கீழே பார்க்கலாம்.
இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார். இதே ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த ரஷியாவின் பெசிக் குடுகோவிடம் இருந்து முன்பு எடுக்கப்பட்ட மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானது.
இதனால் அவரிடம் இருந்து வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டு, யோகேஷ்வர் தத்துக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் 2013-ம் ஆண்டில் கார் விபத்தில் மரணம் அடைந்து விட்ட பெசிக் குடுகோவ் மீதான ஊக்கமருந்து விசாரணையை கைவிட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.
இதனால் யோகேஷ்வர் தத்தின் வெண்கலம், வெள்ளிப்பதக்கமாக மாற வாய்ப்பில்லை.
இதனால் அவரிடம் இருந்து வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டு, யோகேஷ்வர் தத்துக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் 2013-ம் ஆண்டில் கார் விபத்தில் மரணம் அடைந்து விட்ட பெசிக் குடுகோவ் மீதான ஊக்கமருந்து விசாரணையை கைவிட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.
இதனால் யோகேஷ்வர் தத்தின் வெண்கலம், வெள்ளிப்பதக்கமாக மாற வாய்ப்பில்லை.